கோவை மாநகராட்சியின் முதல் வார்டில் நடைபெற்ற பல்வேறு அபிவிருத்திப் பணிகள்

கோவை மாநகராட்சியின் முதல் வார்டில், குடிநீர் விநியோகம், கொசு ஒழிப்பு, மழைநீர் வடிகால் சுத்தம் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்திப் பணிகள் நேற்று (ஜூலை 16) நடைபெற்றன.


Coimbatore: கோவை மாநகராட்சியின் முதல் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று (ஜூலை 16) பல்வேறு அபிவிருத்திப் பணிகள் நடைபெற்றன. வார்டு கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் அறிவுறுத்தலின் பேரில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

விஸ்வநாதபுரம், வி.பி.வி நகர் பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப் பயன்படும் பிரதான குடிநீர் குழாயின் கேட்வால்வில் ஏற்பட்டிருந்த பழுது சரி செய்யப்பட்டு, குடிநீர் விநியோகம் மீண்டும் துவக்கப்பட்டது.



ஜோதி நகர் பகுதியில் கொசு ஒழிப்பு நடவடிக்கையாக கொசு மருந்து தெளிக்கப்பட்டது. ஜல்லிக்காடு, மாரியம்மன் கோவில் மேற்கு வீதி, ருக்கம்மாள் காலனி ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் சுத்தம் செய்யப்பட்டன. அதோடு, இப்பகுதிகளில் காணப்பட்ட முட்புதர்களும் அகற்றப்பட்டன.



வார்டு முழுவதும் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தப் பணிகள் மூலம் வார்டில் வசிக்கும் மக்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக வார்டு கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் கூறினார்.

Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...