கோவை கணபதி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க எம்.பி, ஆட்சியர் ஆய்வு

கோவை கணபதி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க எம்.பி கணபதி ராஜ்குமார், ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். சாலை விரிவாக்கம் மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.


Coimbatore: கோவை மாநகர் கணபதி பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என நெடுநாட்களாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், ஜூலை 16 அன்று மதியம் அப்பகுதியில் கோவை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கணபதி ராஜ்குமார், கோவை ஆட்சியர் Kranthi Kumar Pati, கோவை மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran மற்றும் அரசு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆட்சியர் Kranthi Kumar Pati, "சத்தி ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் நெடுஞ்சாலைத்துறை மற்றும் கோவை மாநகராட்சி சார்பில் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்க உடனடியாக என்ன செய்ய முடியும், கால அவகாசம் எடுத்து என்ன செய்ய முடியும் என்பதை பற்றிய ஆலோசனையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்," என்றார்.



ஆட்சியர் மேலும் கூறுகையில், "இங்கு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினால் சாலை விரிவாக்கம் செய்வதற்கான இடம் கிடைக்கும் என்ற கருத்து ஆய்வின் பின் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த பணிகள் விரைவில் துவங்கும்," என்றார்.

சக்தி ரோட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, கணபதி வேலன் தியேட்டர் முதல் சூர்யா மருத்துவமனை வரை சாலை விரிவாக்கம் செய்ய நிதி ஒதுக்க வேண்டும் என்ற 2020 அக்டோபர் மாத கோவை மாநகராட்சி தீர்மானத்தின்படி நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும் என தெரிகிறது. இங்கு 3 மீட்டர் அளவுக்கு சாலை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.



"மேலும் 73,000 சதுர அடி நிலம் விரிவாக்கத்திற்கு தேவைப்படுகிறது. இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் நிலத்தை கையகப்படுத்தும் பணி 1-2 மாதங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்று ஆட்சியர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...