இன்று கோவையின் எந்த பகுதியில் அதிக வெப்பம் நிலவியது என்று தெரிந்து கொள்ளுங்கள்..!

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் இன்றைய வெப்பநிலை  குறித்து நமக்கு தெரியும். கோவையிலுள்ள வட்டாரங்களில் இன்று நிலவிய வெப்பநிலை குறித்து தெரியுமா? 

இன்றைய வெப்பநிலை குறித்து கோவை வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மையம் கொடுத்த விவரங்கள் பின்வருமாறு :- 

  1. கோவை நகரப்பகுதி - 36.5 டிகிரி,
  2. பெரியநாயக்கன்பாளையம் - 36.4 டிகிரி,
  3. ஆனைமலை - 34.9 டிகிரி,
  4. காரமடை - 37.8 டிகிரி,
  5. சுல்தான்பேட்டை - 34.6 டிகிரி,
  6. சூலூர் - 35.8 டிகிரி,
  7. தொண்டாமுத்தூர் - 35.7 டிகிரி. 


இன்று கோவை மாவட்டத்தில் அதிக வெப்பம் நிலவிய இடமாக காரமடை உள்ளது. இங்கு அதிகபட்ச வெப்பநிலையாக 37.8 டிகிரி வெப்பம் நிலவியுள்ளது.  

சுல்தான்பேட்டை மற்றும் சூலூர் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. 

இதில், சுல்தான்பேட்டையில் மணிக்கு 13.7 கி.மீ வேகத்திலும், சூலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 14 கி.மீ வேகத்திலும் காற்று வீசியுள்ளது.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரையில் காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...