திருப்பூரில் பூரண மதுவிலக்கு மற்றும் பாதுகாப்பு கோரி முதலமைச்சருக்கு மனு

திருப்பூரில் ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் சார்பில் பூரண மதுவிலக்கு, கூலிப்படை ஒழிப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளுடன் முதலமைச்சருக்கு மனு அளிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இன்று (15.7.2024) ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் சார்பில் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாக முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், பணத்திற்காக கொலை செய்யும் கூலிப்படையினரை என்கவுண்டர் செய்ததற்காக தமிழக அரசுக்கும் தமிழக காவல்துறைக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவேலை செய்பவர்கள், இந்துத்துவ பணி செய்பவர்கள், மற்றும் சட்டத்துக்கு புறம்பான செயல்களுக்கு எதிராக மனு கொடுப்பவர்கள் ஆகியோருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் லோட்டஸ் மணிகண்டன் அளித்துள்ளார்.

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...