தாராபுரம் அரசு உதவி பெறும் பள்ளியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டாரத்தில் உள்ள தளவாய்பட்டினம் சிஎஸ்ஐ அரசு நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். அமைச்சர் மாணவர்களுடன் அமர்ந்து உணவு உண்டார்.


திருப்பூர்: தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டாரத்தில் உள்ள தளவாய்பட்டினம் சிஎஸ்ஐ அரசு நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.



திட்டத்தை தொடங்கி வைப்பதற்கு முன், கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளியில் வைக்கப்பட்டுள்ள அவரது திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மரியாதை செலுத்தினார்.



பின்னர், அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை வழங்கினார்.



அவர் மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை அருந்தினார்.



மேலும், தனக்கு அருகில் இருந்த மாணவ மாணவிகளுக்கு காலை உணவை ஊட்டிவிட்டு, அவர்களுடன் அமர்ந்து உணவு உண்டார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...