கோவை அடுக்குமாடி குடியிருப்பில் வாலிபர் தாக்குதல்: போலீஸ் நடவடிக்கை எடுக்க மறுப்பு

கோவை பூச்சியூரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வாலிபர் ஒருவர் குடியிருப்பாளர்களையும் பணியாளர்களையும் தாக்குவதாக புகார். போலீஸார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக குடியிருப்பாளர்கள் குற்றச்சாட்டு.


கோவை: கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள பூச்சியூரில் அமைந்துள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் வாலிபர் ஒருவர் குடியிருப்பாளர்களையும் பணியாளர்களையும் தாக்குவதாக புகார் எழுந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக குடியிருப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த குடியிருப்பில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிக்கும் சங்கர் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். கடந்த நான்கு மாதங்களாக சங்கர் குடியிருப்பாளர்களை அச்சுறுத்துவதோடு, தாக்குவதாகவும் புகார் எழுந்துள்ளது.



சமீபத்தில் வெளியான சிசிடிவி காட்சிகளில், சங்கர் அங்கு பணிபுரியும் வேலைக்காரப் பெண் மற்றும் பாதுகாவலரை தாக்குவது பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளின் அடிப்படையில் குடியிருப்பாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படும் சங்கர், கண்ணாடிகளை உடைத்து ஊசி எறிவதால் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், வீட்டின் கதவுகளை அடிக்கடி தட்டுவதால் வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...