மேட்டுப்பாளையத்தில் இலவச மருத்துவ முகாம்: 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்

மேட்டுப்பாளையம் சங்கர் நகரில் கோவை கவுண்டம்பாளையம் ராமகிருஷ்ண மடம் மற்றும் மேட்டுப்பாளையம் நகராட்சி இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தியது. இதில் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.


கோவை: மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர் இரா.அமுதா அவர்களின் ஆலோசனையின் பேரில், கோவை கவுண்டம்பாளையம் ராமகிருஷ்ண மடம் மற்றும் மேட்டுப்பாளையம் நகராட்சி இணைந்து மேட்டுப்பாளையம் சங்கர் நகர் பகுதி மக்களுக்கு, பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.



மேட்டுப்பாளையம் நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன் அசரப் அலி மற்றும் நகர மன்ற துணைத் தலைவர் அருள்வடிவு முனுசாமி ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ முகாமை துவக்கி வைத்தனர். சங்கர் நகர் பகுதி வார்டு கவுன்சிலர் சங்கீதா முன்னிலை வகித்தார்.



கோவை, கவுண்டம்பாளையம் இராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி பக்திகாமானாந்தர் மகராஜ் தலைமை தாங்கினார். சுவாமி மஹாம்பிகானந்தர் தலைமையிலான மருத்துவ குழுவினர், மருத்துவர் நந்தகிருஷ்ணன், செவிலியர் ராணி பழனிச்சாமி, தன்னார்வலர்கள் திலீப், கண்ணன், கிஷோர், அஜய், யுவனேஷ் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ முகாமை சிறப்பாக நடத்தினர்.

ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணினி பயன்பாட்டுத் துறை தலைவர் பேராசிரியர் முனைவர் எம். ஜெய்குமார் மற்றும் நகராட்சி அலுவலர் ஜெயராமன் ஆகியோர் மருத்துவ முகாம் ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.



இந்த இலவச மருத்துவ முகாமில் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...