கோவை கரும்புக்கடை அருகே கொள்ளைத் திட்டம் தீட்டிய 5 பேர் கைது

கோவை குனியமுத்தூரில் கரும்புக்கடை ஆசாத் நகர் அருகே கொள்ளை திட்டமிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்ட இவர்களிடமிருந்து கத்திகள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Coimbatore: கோவை குனியமுத்தூர் பகுதியில் கரும்புக்கடை ஆசாத் நகர் அருகே கொள்ளை திட்டமிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

குனியமுத்தூர் போலீசார் ஜூலை 12 அன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கரும்புக்கடை ஆசாத் நகர் அருகே உள்ள காலி மைதானத்தில் 5 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் முரணான பதில்களை அளித்தனர். மேலும் சோதனை செய்தபோது, அவர்களிடம் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன.

இதனையடுத்து, அந்த 5 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, அவர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

கைது செய்யப்பட்டவர்கள் வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த முகமத யாசீர் (22), சுண்ணாம்பு காளவாயைச் சேர்ந்த முகமத் அனாஸ் (23), இப்ராஹிம் (36), சுகுணாபுரத்தைச் சேர்ந்த சர்புதீன் (23), மற்றும் ஈரோடு கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த முகமத் வாசீம் (19) ஆகியோர் ஆவர்.

கைதான 5 பேரிடமிருந்து போலீசார் 5 கத்திகள் மற்றும் 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...