கோவை கரும்புக்கடை அருகே கொள்ளைத் திட்டம் தீட்டிய 5 பேர் கைது

கோவை குனியமுத்தூரில் கரும்புக்கடை ஆசாத் நகர் அருகே கொள்ளை திட்டமிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்ட இவர்களிடமிருந்து கத்திகள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Coimbatore: கோவை குனியமுத்தூர் பகுதியில் கரும்புக்கடை ஆசாத் நகர் அருகே கொள்ளை திட்டமிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

குனியமுத்தூர் போலீசார் ஜூலை 12 அன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கரும்புக்கடை ஆசாத் நகர் அருகே உள்ள காலி மைதானத்தில் 5 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் முரணான பதில்களை அளித்தனர். மேலும் சோதனை செய்தபோது, அவர்களிடம் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன.

இதனையடுத்து, அந்த 5 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, அவர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

கைது செய்யப்பட்டவர்கள் வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த முகமத யாசீர் (22), சுண்ணாம்பு காளவாயைச் சேர்ந்த முகமத் அனாஸ் (23), இப்ராஹிம் (36), சுகுணாபுரத்தைச் சேர்ந்த சர்புதீன் (23), மற்றும் ஈரோடு கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த முகமத் வாசீம் (19) ஆகியோர் ஆவர்.

கைதான 5 பேரிடமிருந்து போலீசார் 5 கத்திகள் மற்றும் 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...