கோவை சங்கனூர் பள்ளியில் 7 புதிய வகுப்பறைகளை திறந்து வைத்தார் அமைச்சர் முத்துசாமி

கோவை சங்கனூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.91 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 7 புதிய வகுப்பறைகளை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர், எம்.பி., மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், 32வது வார்டில் உள்ள சங்கனூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் தொடக்கக்கல்வி நிதி திட்டத்தின் கீழ் ரூ.91 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 7 கூடுதல் வகுப்பறைகளை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் Kranthi Kumar Pati, கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கணபதி.ப.ராஜ்குமார், மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் டாக்டர் ச.செல்வசுரபி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், முன்னாள் தொண்டாமுத்தூர் பேரூராட்சி தலைவர் ரவி, மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, கல்விக்குழு தலைவர் மாலதி நாகராஜ், மாமன்ற உறுப்பினர் ரா.பார்த்திபன் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.



மேலும், மாநகராட்சி செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் ஹேமலதா மற்றும் பல மாநகராட்சி அலுவலர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த புதிய வகுப்பறைகள் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...