கோவை பெரிய கடை வீதியில் காவல் அதிகாரிக்கு கொலை மிரட்டல்: இருவர் கைது

கோவை பெரிய கடை வீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகேசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது செய்யப்பட்டனர். சம்பவம் ஜூலை 10 அன்று நடந்தது.


கோவை: கோவை கடைவீதி காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் முருகேசன், ஜூலை 10 அன்று பெரிய கடை வீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பொது இடத்தில் தகராறு செய்து கொண்டிருந்த இருவரை அவர் கண்டித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த இருவரும், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகேசனை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கொலை மிரட்டலும் விடுத்தனர். இது தொடர்பாக கடைவீதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில், சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அங்கு தகராறில் ஈடுபட்டிருந்த தெற்கு உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த சர்தார் (வயது 33) மற்றும் தில்லை நகரை சேர்ந்த அந்தோணி ஜெகன் மனைவி மேரி (வயது 40) ஆகியோரை கைது செய்தார்.

கைது செய்யப்பட்ட இருவர் மீதும் அரசு ஊழியரை பணி செய்ய விடாது தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...