கோவை மாநகராட்சி விரிவாக்கம்: வைரலான வரைபடம் குறித்து ஆணையாளர் விளக்கம்

கோவை மாநகராட்சி விரிவாக்கம் குறித்து சமூக ஊடகங்களில் பரவிய வரைபடம் உண்மையல்ல என்று ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் விளக்கமளித்துள்ளார். விரிவாக்கம் குறித்த வரைவு அறிக்கை இன்னும் தயாரிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.


Coimbatore: கோவை மாநகராட்சியின் எல்லைகளை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு கோவை மாவட்ட நிர்வாகத்திடம் கருத்துரு கோரியுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. இதையடுத்து, கோவை மாநகராட்சியுடன் இணையவுள்ள கிராமங்கள் என்ற தலைப்பில் ஒரு வரைபடம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

இந்த வரைபடத்தில் வெள்ளமடை, அக்ராஹாரசாமக்குளம், கீரணத்தம், நீலாம்பூர், இருகூர், மலுமிச்சம்பட்டி, தீத்திபாளையம், வேடப்பட்டி, பண்ணிமடை உள்ளிட்ட 20 கிராமங்கள் அடங்கியிருந்தன. இது உண்மை என்றே பலரும் நம்பினர்.



இந்நிலையில், இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரன் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது: "சமூக வலைத்தளங்களில் பரவிய அந்த வரைபடம் கோவை மாநகராட்சி தரப்பில் உருவாக்கப்பட்டது அல்ல. கோவை மாநகராட்சியை விரிவாக்கம் செய்ய திட்டமுள்ளது. ஆனால் அதற்குள் எந்தெந்த பகுதிகளை சேர்க்கலாம் என இன்னும் நாங்கள் இறுதி செய்யவில்லை. இதுபற்றிய வரைவு அறிக்கை இன்னும் தயாரிக்கப்படவில்லை."

கோவை மாநகருக்கு அருகே உள்ள சில பஞ்சாயத்துகளை மாநகருடன் இணைக்க மாநகராட்சி ஆலோசித்து வருவதாகவும், இந்த பணிகள் முடிந்த பின்னர், அதற்கு அடுத்து வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...