கோவை மாநகராட்சி சிறப்புக் கூட்டம்: அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் கேள்வி

கோவை மாநகராட்சி சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா குறித்து அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் கேள்வி எழுப்பினார். ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை கோரிக்கை.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில் மாமன்ற சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. துணை மேயர் ரா.வெற்றிசெல்வன் தலைமையிலும், மாநகராட்சி ஆணையாளர் மா சிவகுரு பிரபாகரன் முன்னிலையிலும் இன்று ஜூலை 8 அன்று இந்தக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பின் அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறியதாவது: "கோவை மேயராக இருந்த கல்பனா ஆனந்தகுமார் செயலற்ற மேயராக இருந்தார் என்று பலமுறை சொன்னோம். ஆனால் இப்போது தான் திமுகவுக்கு அவரைப் பற்றி தெரியவந்துள்ளது. மாநகராட்சியில் பல்வேறு ஊழல்கள் நடைபெறுவதை பலமுறை சுட்டிக்காட்டியுள்ளோம்."

"மேயர் ஏன் ராஜினாமா செய்துள்ளார் என்பதை அரசு தனிக்குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும். அவர் இரண்டு ஆண்டுகளில் என்னென்ன ஊழல்களில் ஈடுபட்டுள்ளார் என்பதை விசாரிக்க வேண்டும். மேயர் இல்லாத சமயத்தில் பல்வேறு முறைகேடுகள் நடக்கும் எனவே ஆணையர் நேரடியாகக் கண்காணிக்க வேண்டும்," என்று பிரபாகரன் வலியுறுத்தினார்.

மேலும் அவர், "பழைய மேயர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. அவரை மறைத்து வைத்திருக்கிறார்கள். வாட்ஸ்அப்பில் குழு அமைத்து டெண்டர் எடுத்த மேயரை எங்காவது பார்த்தது உண்டா? என்ன காரணத்திற்காக ராஜினாமா செய்தார் என்ற முழு விவரத்தை கூட மன்றத்தில் துணை மேயர் வைக்கவில்லை," என்று குற்றம் சாட்டினார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...