கோவை மாநகரில் மழை: தண்ணீர் தேக்கமின்றி இயல்பு வாழ்க்கை - உக்கடம் பெரிய குளத்தில் குப்பை அகற்றும் பணி தீவிரம்

கோவையில் மிதமான மழை பெய்தும், நகராட்சி ஆணையரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தண்ணீர் தேக்கமின்றி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. உக்கடம் பெரிய குளத்தில் குப்பை அகற்றும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.


கோவை: கோவை மாநகரில் உக்கடம், சுங்கம், ராமநாதபுரம், காந்திபுரம், சுந்தராபுரம், கவுண்டம்பாளையம், செல்வபுரம், டவுன் ஹால், சாய்பாபா காலனி உள்ளிட்ட பகுதிகளில் இரவு முதல் மிதமான மழை பொழிந்து வருகிறது. வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் நிலையில், விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது.



இந்நிலையில், சாலைகளில் தண்ணீர் தேங்காததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை. சாலை போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் பயணம் தடையின்றி நடைபெற்று வருகிறது. வழக்கமாக மாநகரின் முக்கிய சாலைகள் மற்றும் பாலங்களில் மழை நீர் தேங்கும் நிலை இருந்தபோதிலும், மாநகராட்சி ஆணையர் M சிவகுருபிரபாகரன் அவர்களின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இம்முறை அத்தகைய நிலை ஏற்படவில்லை.



மழை நீர் வடிகால் பணிகள் தண்ணீர் தேங்கும் இடங்களில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக, மழை நீர் தேங்காமல் வடிந்தோடியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

மறுபுறம், கோவை உக்கடம் பெரியகுளம் ஸ்மார்ட் சிட்டி பகுதியில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் அப்பகுதிக்கு வந்து சென்றனர். இதனால் தின்பண்ட கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் அங்கங்கே வீசப்பட்டுள்ளன.

இன்று காலை முதல் ஸ்மார்ட் சிட்டி பணியாளர்கள் கிளம்பர் தனியாங்கி எனப்படும் நவீன கழிவு அகற்றும் வாகனம் மூலம் குப்பைகளை அகற்றும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் உக்கடம் பெரியகுளம் பகுதி விரைவில் தூய்மையாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை: திமுக கவுன்சிலர்கள் இருவர் அதிமுகவில் இணைந்தனர்; CPI கவுன்சிலர் ராஜினாமா

கோயம்புத்தூரில் திமுகவைச் சேர்ந்த இரு மாநகராட்சி உறுப்பினர்கள் அதிமுகவில் இணைந்த நிலையில், சிபிஐ கவுன்சிலர் ஒருவர் கட்சி...

கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக...

காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை...

தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...