கோவையில் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து ராஜவாய்க்கால் சுத்தம் செய்த கவுன்சிலர்

கோவை மாநகராட்சியின் 86வது வார்டில், கவுன்சிலர் அகமது கபீர் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து ராஜவாய்க்கால் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். இச்செயல் சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


Coimbatore: கோவை மாநகராட்சியின் 86வது வார்டு பகுதியில் உள்ள ராஜவாய்க்கால் சுத்தம் செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து கவுன்சிலர் அகமது கபீர் ஈடுபட்டுள்ளார். இந்த நிகழ்வின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

உக்கடம் குழந்தை கவுண்டர் வீதி பகுதியில் அமைந்துள்ள ராஜவாய்க்கால், தொடர்ந்து குப்பைகள் அதிகமாக சேர்ந்து சாக்கடை நிரம்பி வழிகிறது. மழைக்காலத்தில் இது பொதுமக்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில், வாய்க்காலை சுத்தம் செய்ய தூய்மை பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.



அப்போது, அப்பகுதி கவுன்சிலரும் மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்தவருமான அகமது கபீர், தூய்மை பணியாளர்களுடன் இணைந்து நீர் வழிப்பாதையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். இச்செயல் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.

"பொதுமக்கள் மழைக்காலத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ராஜவாய்க்காலில் குப்பைகளை கொட்டாமல், குப்பை தொட்டியில் கொட்ட வேண்டும்," என்று கவுன்சிலர் அகமது கபீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த செயல் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, மற்ற பிரதிநிதிகளும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையம் 5.15% வளர்ச்சியுடன் புதிய சாதனை படைப்பு

கோவை சர்வதேச விமான நிலையம் 2025-26 நிதியாண்டில் 5.15% வளர்ச்சி பதிவு செய்துள்ளது. இந்த காலத்தில் மொத்தம் 34,20,745 பேர்...

கோவை: திமுக கவுன்சிலர்கள் இருவர் அதிமுகவில் இணைந்தனர்; CPI கவுன்சிலர் ராஜினாமா

கோயம்புத்தூரில் திமுகவைச் சேர்ந்த இரு மாநகராட்சி உறுப்பினர்கள் அதிமுகவில் இணைந்த நிலையில், சிபிஐ கவுன்சிலர் ஒருவர் கட்சி...

கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக...

காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை...

தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...