குடியிருப்பு பட்டா கோரி அனுப்பர்பாளையம் பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு


கோவை மாவட்டம், அனுப்பர்பாளையம் அருகே உள்ள ராம்நகர் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா கோரி கோவை மாவட்ட விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் தலைமையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகள் நாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு உடனடியாக குடியிருக்க பட்டா வழங்குவதாக தெரிவித்தனர். ஆனால், மூன்று ஆண்டுகள் ஆகியும் பட்டா வழங்கப்படவில்லை.

இது தொடர்பாக அப்போதைய கோவை மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் கிருஸ்துராஜ் ஆகியோரைச் சந்தித்து தெரிவித்தபோது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எங்களுக்கு தெலுங்குபாளையம் பகுதியில் இடம் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தனர்.

சுமார், 3 ஆண்டுகள் ஆகியும் எங்களுக்கு பட்டா வழங்கவில்லை. தற்போது, பருவமழை பெய்யாததால் வேலை இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். ஏழ்மையான குடும்பத்தை சார்ந்த எங்களுக்கு உடனடியாக பட்டா வழங்கி எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...