'MYV3ADS' நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார்

கோவையைச் சேர்ந்த 'MYV3ADS' நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன், பணமோசடி குற்றச்சாட்டுகளை அடுத்து சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். நீதிமன்றம் அவரை ஜூலை 19 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.


கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 'MYV3ADS' நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன், சென்னையில் உள்ள நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 5) சரணடைந்தார்.

'MYV3ADS' என்ற செயலி மூலம் வீடியோ விளம்பரங்கள் பார்த்தால் பணம் கிடைக்கும் என்றும், உறுப்பினர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் என்றும் கூறி நிறுவனத்தை நடத்தி வந்த சக்தி ஆனந்தன் மீது கடந்த ஜனவரி மாதம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கோவை மாநகர காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கு முதலில் கோவை சைபர் குற்றப்பிரிவு போலீசாரால் விசாரிக்கப்பட்டு, பின்னர் சென்னை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. சக்தி ஆனந்தன் முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார், ஆனால் அது தள்ளுபடி செய்யப்பட்டது.

நீதிபதி மலர் வாலண்டீனா முன்னிலையில் சரணடைந்த சக்தி ஆனந்தனை ஜூலை 19 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சக்தி ஆனந்தன் தரப்பில் ஜாமீன் கோரியும், ஜெயிலில் முதல் வகுப்பு வசதி வேண்டும் என்றும் மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 'MYV3ADS' நிறுவனம் மீதான பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...