கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சி.ராமசாமி காலமானார்

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சி.ராமசாமி (77) உடல்நலக்குறைவால் காலமானார். இவர் புகழ்பெற்ற பொருளாதார விஞ்ஞானியாகவும், பல சர்வதேச கட்டுரைகளை வெளியிட்டவராகவும் அறியப்படுகிறார்.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சி.ராமசாமி (77) காலமானார். திண்டுக்கல் மாவட்டம் பழனி, வாகரை கிராமத்தைச் சேர்ந்த இவர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் 8-வது துணைவேந்தராக, 2002 முதல் 2008-ம் ஆண்டு வரை இரண்டு முறை பொறுப்பு வகித்துள்ளார்.

டாக்டர் சி.ராமசாமி ஒரு புகழ்பெற்ற பொருளாதார விஞ்ஞானியாகவும், பல சர்வதேச கட்டுரைகளை வெளியிட்டவராகவும் அறியப்படுகிறார். உலக சுகாதார நிறுவனத்தின் திட்டங்கள் மற்றும் பல உயர்மட்ட குழுக்களின் ஆலோசகராக பணியாற்றியுள்ளார். மேலும், இந்திய பொருளாதார மன்றத்தின் தலைவராகவும் பணிபுரிந்துள்ளார்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதிலும், தொழில்துறைகளுடன் ஆராய்ச்சி புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்வதிலும், தனியார் வேளாண் கல்லூரிகளை துவக்குவதிலும், சொந்த வருவாயைப் பயன்படுத்தி பல்கலைக்கழகத்தை நடத்துவதிலும் சிறப்பாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் சி.ராமசாமிக்கு சந்திரா என்ற மனைவியும், பிரியா ஆனந்த், சவிதா லெனின் என்ற இரு மகள்களும் உள்ளனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில், ஜூலை 5 அன்று காலமானார்.

இவரது இறுதிச்சடங்கு கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் ஜூலை 5 அன்று நடைபெற்றது. இவரது மறைவுக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் டாக்டர் கீதாலட்சுமி மற்றும் பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் என பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...