பொள்ளாச்சியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பகுதியில் ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன.


கோவை: கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் நோக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை காவல்துறையினர் மாக்கினாம்பட்டி அருகே சோதனை மேற்கொண்டனர். அப்போது, கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த ஜபருல்லா மகன் சேக்பரீத் (23) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.30,000 மதிப்புள்ள 2 கிலோ கஞ்சா மற்றும் ஒரு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த மே 1 ஆம் தேதி முதல் கோவை மாவட்டத்தில் நடத்தப்பட்ட சிறப்பு அதிரடி சோதனைகளின் மூலம், இதுவரை போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 109 நபர்கள் மீது 67 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 188.725 கிலோ எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார். இது போன்ற குற்றங்கள் குறித்து தகவல் தெரிவிக்க பொதுமக்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம் என்றும், தகவல் தெரிவிப்போரின் ரகசியம் காக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...