பொள்ளாச்சியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பகுதியில் ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன.


கோவை: கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் நோக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை காவல்துறையினர் மாக்கினாம்பட்டி அருகே சோதனை மேற்கொண்டனர். அப்போது, கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த ஜபருல்லா மகன் சேக்பரீத் (23) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.30,000 மதிப்புள்ள 2 கிலோ கஞ்சா மற்றும் ஒரு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த மே 1 ஆம் தேதி முதல் கோவை மாவட்டத்தில் நடத்தப்பட்ட சிறப்பு அதிரடி சோதனைகளின் மூலம், இதுவரை போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 109 நபர்கள் மீது 67 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 188.725 கிலோ எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார். இது போன்ற குற்றங்கள் குறித்து தகவல் தெரிவிக்க பொதுமக்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம் என்றும், தகவல் தெரிவிப்போரின் ரகசியம் காக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...