அதிமுக-வின் இரு அணிகளும் ஒன்றுசேர முயற்சி மேற்கொள்வதை ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கையாக கையாள வேண்டும்- கோவையில் ஆனந்தராஜ் பேட்டி


அதிமுக துணை பொதுச் செயலாளர் தினகரனை கட்சியில் இருந்து நீக்கிவிட்டு, இரு அணிகளும் மீண்டும் ஒன்று சேர முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுவதை ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கையாக கையாள வேண்டும் என அதிமுக முன்னாள் நட்சத்திர பேச்சாளரும், நடிகருமான ஆனந்தராஜ் வலியுறுத்தியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் நடிகர் ஆனந்தராஜ் செய்தியாள்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒரே ஒரு தொகுதிக்கு 100 கோடி செலவு செய்துள்ளனர்.  தினகரன் தவிர வேறு யாராவது நின்று இருந்தால் இந்த அளவு செலவு செய்திருப்பார்களா ?.

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்கப்பட்டு இருப்பது டி.டி.வி.தினகரன் அளித்துள்ள பேட்டி மூலமே வெளிப்படுகிறது. கொங்குமண்டலம் அதிமுக-விற்கு பெரிய அளவில் ஆதரவு அளித்திருக்கும் நிலையில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் மக்கள் வருத்தத்தினை போக்க நல்ல முடிவினை எடுக்க வேண்டும். அதிமுக ஒரு குடும்ப கட்சியாக இருக்கக் கூடாது.

எந்த அணியிலும் இதுவரை தான் இல்லை. நடிகனாகவும், அம்மாவின் பிள்ளையாகவும் மட்டுமே உள்ளேன். தினகரனை கட்சியில் இருந்து நீக்கிவிட்டு இரு அணிகளும் மீண்டும் ஒன்று சேர முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுவதை ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கையாக கையாள வேண்டும்.

இந்த ஆட்சியை மக்களிடம் கொடுத்து விட வேண்டும். ஆட்சியை கலைத்துவிட்டு யாரை வேண்டுமானாலும் மக்கள் தேர்வு செய்யட்டும். மாற்றம் வருவதற்கான சூழல்கள் தெரிகிறது.

இயக்குனர் கௌதமன் சென்னை கத்திபாரா பாலத்தில் போராட்டம் நடத்தியது கண்டிக்கத்தக்கது. இது போன்ற போராட்டங்கள் மக்களுக்கு இடையூறாகவே இருக்கும். 

தமிழகத்தில் ஆட்சி நடக்கின்றதா என்பதே யாருக்கும் தெரியவில்லை. செயல்படாத முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். அதிமுக அம்மா அணியில் நட்சத்திர பேச்சாளர்கள் இருக்க விரும்பவில்லை. அதனாலேயே நடிகை விஜயசாந்தி, நடிகர் சரத்குமார் போன்றவர்கள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர்" என ஆனந்தராஜ் பேசினார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...