கோவையில் சி.ஏ. மாணவர்களுக்கான தேசிய மாநாடு: 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

கோவையில் இந்திய பட்டய கணக்காளர்கள் சங்கம் சார்பில் இரண்டு நாள் சி.ஏ. மாணவர்கள் தேசிய மாநாடு நடைபெற்றது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.


கோவை: கோவையில் இந்திய பட்டய கணக்காளர்கள் சங்கம் (ICAI) சார்பில் சி.ஏ. மாணவர்களுக்கான தேசிய மாநாடு இரண்டு நாட்கள் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.



இந்த மாநாட்டில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சி.ஏ. படிக்கும் 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். முதல் நாளில் தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டட் அக்கவுண்டன்ட் ஆப் இந்தியா மற்றும் போர்ட் ஆஃப் ஸ்டடிஸ் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இந்த மாநாடு தென்னிந்திய பட்டயக் கணக்காளர்கள் பிராந்திய கவுன்சில் கோவை கிளை (SIRC) மற்றும் தென்னிந்திய பட்டயக் கணக்காளர்கள் மாணவர்கள் சங்கம் கோவை கிளையால் (SICASA) நடத்தப்பட்டது. கருத்தரங்கில் வருமான வரிச் சட்டங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த கலந்துரையாடல், சி.ஏ. படிப்பிற்கான ஆர்வத்தை தூண்டும் வகையிலான சொற்பொழிவுகள், ஜிஎஸ்டி மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) குறித்த கலந்துரையாடல்கள் உள்ளிட்டவை இடம்பெற்றன.



ICAI முன்னாள் தலைவர் சி.ஏ. ராமசாமி தலைமை விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். சி.ஏ. ஆர்.கேசவன், முன்னாள் இயக்குநர்-நிதி, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் கெளரவ விருந்தினராக கலந்து கொண்டார்.

மாநாட்டில் சி.ஏ. K.ஸ்ரீப்ரியா குமார் (மத்திய கவுன்சில் உறுப்பினர்), கோவை ICAI கிளையின் தலைவர் விஷ்ணு ஆதித்தன், SICASA கோவை கிளை தலைவர் சி.ஏ. தங்கவேல் M, ICAI கோவை கிளையின் செயலாளர் சி.ஏ. சர்வஜித் எஸ்.கிருஷ்ணன் மற்றும் பல தொழில்துறை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...