கோவை: நடிகை அதுல்யா வீட்டில் திருட்டு - வேலைக்கார பெண் உள்பட இருவர் கைது

கோவையில் நடிகை அதுல்யா வீட்டில் வேலைக்கார பெண் மற்றும் அவரது தோழி திருட்டில் ஈடுபட்டனர். சிசிடிவி காட்சிகள் மூலம் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டனர்.


கோவை: கோவையில் நடிகை அதுல்யா ரவியின் வீட்டில் நடந்த திருட்டு சம்பவத்தில் வேலைக்கார பெண் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வடவள்ளி, மருதம் சாலையில் உள்ள வீட்டில் நடிகை அதுல்யா ரவி தனது தாயார் விஜயலட்சுமியுடன் வசித்து வருகிறார். இவர்களது வீட்டில் தொண்டாமுத்தூர் அடுத்த குளத்து பாளையத்தைச் சேர்ந்த செல்வி என்ற பெண் வீட்டு வேலைகளை செய்து வந்துள்ளார். அடிக்கடி வீட்டில் பணம் மாயமாகி வந்ததால், விஜயலட்சுமி சந்தேகம் அடைந்து வீட்டில் இரண்டு சிசிடிவி கேமராக்களை பொருத்தினார்.

கடந்த மாதம் சென்னை சென்று திரும்பிய விஜயலட்சுமி, வீட்டில் இருந்த 2000 ரூபாய் பணம் மாயமானதை கண்டு, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் வீட்டு வேலைக்கார பெண் செல்வி பீரோவில் இருந்த 2000 ரூபாய் பணம் மற்றும் பாஸ்போர்ட்டை திருடியது தெரிய வந்தது. இது குறித்து விஜயலட்சுமி வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து செல்வியை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் செல்வி, தனது தோழி சுபாஷினியுடன் சேர்ந்து பணம் மற்றும் பாஸ்போர்ட்டை திருடியதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார் செல்வி மற்றும் சுபாஷினி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூபாய் 1500 பறிமுதல் செய்யப்பட்டது. பாஸ்போர்ட்டை அச்சத்தில் கிழித்து எறிந்துவிட்டதாக செல்வி தெரிவித்துள்ளார். இந்நிலையில், திருட்டு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் ஆடியோவுடன் வெளியாகியுள்ளன.

வெளியான காட்சிகளில், வீட்டை தாளிட்டு வந்த பின் 2000 ரூபாய் மட்டும் பணம் இருப்பதாக இருவரும் பேசும் உரையாடல்களுடன், பணத்தை திருடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தின் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான அதுல்யா ரவியின் வீட்டில் நடந்த இந்த திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...