புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்தில் குட்டிகரணம் போட்டு பொதுமக்கள் போராட்டம்

அன்னூர் வட்டத்திற்குட்பட்ட கள்ளிப்பாளையம் ஊராட்சியில் புதிதாக மதுபான கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒப்பாரி போராட்டம் நடத்தினர்.



அப்போராட்டத்தின் போது, தங்கள் ஊருக்குள் மதுபானக் கடை அமைந்தால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். எனவே, கோவை மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிம் மனு அளித்தனர்.



அதே போல, இந்துமக்கள் கட்சியின் சார்பாக பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் புதிதாக மதுபான கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குட்டிகாரணம் போட்டு அக்கட்சியினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கரவழி, மாதப்பூர், கணியூர் சாலை மற்றும் ஊஞ்சப்பாளையம் சாலையில் புதிதாக மதுபான கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கைகளில் மதுபான கடை வேண்டாம் என்ற பதாகைகளை ஏந்தி, மதுபான கடைக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் கோஷங்களை எழுப்பினர்.

இப்பகுதியில் பள்ளி, கல்லூரிகள் இருப்பதாலும், பெண்கள் அதிகமாக பயன்படுத்தும் குடிநீர் தொட்டி மற்றும் கோவில் அருகில் புதிதாக மதுபான கடை அமையவிருப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டு அப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதை தடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...