அன்னூர் வட்டத்திற்குட்பட்ட கள்ளிப்பாளையம் ஊராட்சியில் புதிதாக மதுபான கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒப்பாரி போராட்டம் நடத்தினர்.

அப்போராட்டத்தின் போது, தங்கள் ஊருக்குள் மதுபானக் கடை அமைந்தால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். எனவே, கோவை மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிம் மனு அளித்தனர்.

அதே போல, இந்துமக்கள் கட்சியின் சார்பாக பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் புதிதாக மதுபான கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குட்டிகாரணம் போட்டு அக்கட்சியினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கரவழி, மாதப்பூர், கணியூர் சாலை மற்றும் ஊஞ்சப்பாளையம் சாலையில் புதிதாக மதுபான கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கைகளில் மதுபான கடை வேண்டாம் என்ற பதாகைகளை ஏந்தி, மதுபான கடைக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் கோஷங்களை எழுப்பினர்.
இப்பகுதியில் பள்ளி, கல்லூரிகள் இருப்பதாலும், பெண்கள் அதிகமாக பயன்படுத்தும் குடிநீர் தொட்டி மற்றும் கோவில் அருகில் புதிதாக மதுபான கடை அமையவிருப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டு அப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதை தடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.

அப்போராட்டத்தின் போது, தங்கள் ஊருக்குள் மதுபானக் கடை அமைந்தால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். எனவே, கோவை மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிம் மனு அளித்தனர்.

அதே போல, இந்துமக்கள் கட்சியின் சார்பாக பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் புதிதாக மதுபான கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குட்டிகாரணம் போட்டு அக்கட்சியினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கரவழி, மாதப்பூர், கணியூர் சாலை மற்றும் ஊஞ்சப்பாளையம் சாலையில் புதிதாக மதுபான கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கைகளில் மதுபான கடை வேண்டாம் என்ற பதாகைகளை ஏந்தி, மதுபான கடைக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் கோஷங்களை எழுப்பினர்.
இப்பகுதியில் பள்ளி, கல்லூரிகள் இருப்பதாலும், பெண்கள் அதிகமாக பயன்படுத்தும் குடிநீர் தொட்டி மற்றும் கோவில் அருகில் புதிதாக மதுபான கடை அமையவிருப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டு அப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதை தடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.