ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு மாமியார் கொலை மிரட்டல் விடுவதாக மாவட்ட ஆட்சியரிடம் பெண் புகார்


கோவை மாவட்டம், சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா (27). இவரும் பொள்ளாச்சியை சேர்ந்த மோகன் என்பவரும் காதலித்து கடந்த 2011ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதியினருக்கு ரித்திகா என்ற நான்கரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், கணவரின் தாயார் வரதட்சணை கேட்டு கொலை மிரட்டல் விடுவதாக இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் திவ்யா மனு அளித்தார். அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

எனது கணவர் பெயர் மோகன். எங்களுக்கு கடந்த 2011ம் ஆண்டு திருமணம் நடைபெற்று ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், எனது கணவரின் தாயார், என்னிடம் ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு தொடர்ந்து துன்புறுத்தி வருகிறார். எனது கணவரை சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று அடைத்து வைத்துள்ளனர். இதுகுறித்து கேட்டாலும், பணம் தராவிட்டாலும் கொலை செய்துவிடுவதாகவும் எனக்கு மிரட்டல் விடுத்து வருகிறார்.

இது தொடர்பாக சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் புகாரின் பேரில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே, மாவட்ட ஆட்சியர் இப்பிரச்சனையில் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...