கோவை - மேட்டுப்பாளையம் இரட்டை இருப்புப் பாதைக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தல்

கோவை - மேட்டுப்பாளையம் இடையே இரட்டை இருப்புப் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அமைச்சர் எல்.முருகன் இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் மனு அளித்தார். இந்த திட்டம் பெரியநாயக்கன்பாளையம் வழியாக செல்லும்.


Coimbatore: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் முதல் கோவை இரயில் நிலையம் வரையிலான வழித்தடத்தில் இரட்டை இருப்புப் பாதை அமைக்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை வலியுறுத்தி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் மனு அளித்தார்.

மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள், நீண்டகாலமாக இந்த கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், அப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, ஜூலை 4 அன்று இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மனு வழங்கினார்.

இந்த இரட்டை இருப்புப் பாதை திட்டம் பெரியநாயக்கன்பாளையம் வழியாக செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், கோவை - மேட்டுப்பாளையம் இடையிலான பயண நேரம் குறைவதோடு, அதிக எண்ணிக்கையிலான ரயில்களை இயக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...