வால்பாறை தேயிலை தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.450 கூலி வழங்க வலியுறுத்தி ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரதம்


வால்பாறையில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தினக் கூலியாக நாளொன்றுக்கு ரூ.450 வீதம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் சார்பாக வால்பாறை பழைய பேருந்து நிலையம் அருகில் 50-க்கும் மேற்பட்டவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வால்பாறை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தலைமை வகித்து உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், கேரளாவில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 300 ரூபாயிக்கும் மேல் தினக்கூலியாக வழங்கப்பட்டு வருகிறது. வால்பாறை பகுதி தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மிகவும் குறைவாகவே வழங்கப்படுகிறது. 



எனவே, அரசுக்கும், தேயிலை தோட்ட நிர்வாகத்தினரும் வால்பாறை தேயிலை தோட்ட தொழிலார்களுக்கு நாளொன்றுக்கு 450 ரூபாய் வீதம் வழங்க வேண்டும்' என்று உரையாற்றினார்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கௌரவ தலைவர் கோவிந்தராஜன், பொதுச்செயலாளர் மோகன், துணைத்தலைவர்கள் மாணிக்கம், சின்னப்பன், ஜீவனந்தம், பாலகிருஷ்ணன், அண்ணாதுரை ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில் சங்க பொதுச்செயலாளர் மோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாணிக்கம், ஆனைமலையை சேர்ந்த சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வால்பாறை காவல் நிலையத்தில் ஏஐடியுசி, பாஜக-வினர் புகார்

வால்பாறை ஏஐடியுசி-வினர் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டத்தின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் பேசுகையில் அத்துமீறி கூட்டத்தில் நுழைந்த பாஜக-வினர் மைக்குகளை பிடுங்கி உடைத்து ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிபிஐஎம் மற்றும் ஏஐடியுசி-வினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனிடையே, ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டக் கூட்டத்தின் போது பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தனது உரையில், பிரதமர் மோடியை தவறாக பேசியதாக வால்பாறை பாஜக மண்டல பொதுச்செயலாளர் கார்த்திக் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

அம்மனுவில், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை தேச விரோதிகள் என்று மிகவும் கீழ் தரமாக பேசிய சிபிஐஎம் வால்பாறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஏஐடியுசி தொழிற்சங்க தலைவர் ஆறுமுகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...