மு.க.ஸ்டாலினால் ஈர்க்கப்பட்டு திமுக-வில் இணைந்த கோவை வாழ் வடமாநிலத்தவர்கள்

தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலைகளினால் எந்த அரசு தங்களை ஆட்சி செய்கிறது என்ற குழப்பத்தில் மக்கள் உள்ளனர். இதற்கு காரணம் அதிமுக-வில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசாலே ஆகும். தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தலிலும், அதுத்தடுத்து வரும் தேர்தல்களிலும் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் விதமாக திமுக-வும் தங்களது பங்களிப்பை செலுத்தி வருகின்றன.

அதிமுகவின் நிலையற்ற ஆட்சியினைத் தொடர்ந்து, திமுக புதிய மேம்பாட்டுச் செயல்களை மேற்கொண்டு வரும் நிலையில் அக்கட்சியில் உறுப்பினர்களாக சேர்வோர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது.



அதன்படி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவராக பொறுப்பில் உள்ள மு.க.ஸ்டாலின் செயல்களால் ஈர்க்கப்பட்ட  கோவையில் வாழ்ந்து வரும் வட மாநில மொழி பேசும் சிந்தி, குஜராத்தி, ஜெயின் பஞ்சாபி, மார்வாடி சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இன்று திமுகவில் இணைந்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி, மாநில இளைஞர் அணி துணை செயலாளர் பைந்தமிழ் பாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் நாச்சிமுத்து, கார்த்திக் செல்வராஜ், நா.முருகவேல், ராஜேந்திர பிரபு மற்றும் மு.க.ஸ்டாலின் இளைஞர் நற்பணி மன்றத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...