கோவை கே.ஜி.மருத்துவமனை முன்பு போக்குவரத்தை சரி செய்த மருத்துவர் பக்தவச்சலம்

கே.ஜி.மருத்துவமனை முன்பு வாகன நெரிசல் வழக்கத்துக்கும் மாறாக அதிகமாக ஏற்பட்டது. அதனை சரி செய்யும் வகையில் கே.ஜி.மருத்துவமனை தலைவர் மருத்துவர் பக்தவச்சலம் வாகனங்களை சீர்செய்து போக்குவரத்து நெரிசலை சரி செய்து பாதசாரிகள் வழியாக பொது மக்களை அனுப்பி வைத்தார்.


கோவை: கோவையில் பல்வேறு பகுதிகளில் உயர் மேம்பாலங்களில் பணி நடைபெற்று வருவதால் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கோவை பந்தையசாலை மற்றும் அரசு கலைக்கல்லூரி சாலைகளில், மருத்துவமனை, நீதிமன்றம், திரையரங்கம், கல்லூரி மற்றும் பள்ளிகள் இருப்பதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று ஜூன்.27 அச்சாலையில் உள்ள கே.ஜி.மருத்துவமனை முன்பு வாகன நெரிசல் வழக்கத்துக்கும் மாறாக அதிகமாக ஏற்பட்ட நிலையில் அதனை சரி செய்யும் வகையில் கே.ஜி.மருத்துவமனை தலைவர் மருத்துவர் பக்தவச்சலம் வாகனங்களை சீர்செய்து போக்குவரத்து நெரிசலை சரி செய்த பின்பு பாதசாரிகள் வழியாக பொது மக்களை அனுப்பி வைத்தார்.

மருத்துவரின் இச்செயல் அப்பகுதி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றதுடன் மருத்துவர் போக்குவரத்தை சரி செய்யும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Newsletter

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...