அதிமுக ஆட்சியில் போட்டப்பட்ட வழக்கில் இருந்து திமுக நிர்வாகிகள் விடுதலை - கோவை நீதிமன்றம் உத்தரவு

கடந்த அதிமுக ஆட்சியின்போது, நிர்வாக சீர்கேட்டை கண்டித்து கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது போடப்பட்ட வழக்கில் இருந்து திமுக நிர்வாகிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: கடந்த அதிமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து (27.8.2019) அன்று கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது போடப்பட்ட வழக்கு விசாரணை கோவை JM.7 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.



இந்த வழக்கு விசாரணை இன்று (ஜூன்.26) நடைபெற்ற நிலையில் வழக்கில் சம்பந்தப்பட்ட திமுக முன்னாள் மாவட்ட செயலாளர்கள் மு.முத்துசாமி, தென்றல் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன், குனியமுத்தூர் பகுதி செயலாளர் லோகநாதன், கூடலூர் நகரமன்ற தலைவர் அறிவரசு, கவுண்டம்பாளையம் முன்னாள் பகுதி செயலாளர் மதியழகன், வீரபாண்டி கார்த்தி, காங்கிரஸ் கட்சயைச் சார்ந்த குனிசை செல்வம், சி.பி.எம், நாகேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்த முகமதுஅலி உள்ளிட்ட அனைவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

அப்போது கழக மூத்த வழக்கறிஞர் கே.எம்.தண்டபாணி மற்றும் கழக வழக்கறிஞர்கள் குழுவும் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...