துர்கா ஸ்டாலின் சகோதரருக்கு தமிழக அரசு முக்கிய பதவி - மருத்துவ பணிகள் இயக்குனராக நியமனம்

தமிழக இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளின் கூடுதல் இயக்குனராக இருந்த துர்கா ஸ்டாலின் சகோதரர் ராஜமூர்த்திக்கு, சமீபத்தில் டி.எம்.எஸ் தர நிலையில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. தற்போது, மாநில மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.


கோவை: துர்கா ஸ்டாலின் சகோதரரும், மருத்துவருமான ஜெ.ராஜமூர்த்தி டி.எம்.எஸ் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். டாக்டர் ஜெ.ராஜமூர்த்தி மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் (டி.எம்.எஸ்) இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் சகோதரர் ஆவார்.

தமிழக இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளின் கூடுதல் இயக்குனராக இருந்த ராஜமூர்த்திக்கு, சமீபத்தில் டி.எம்.எஸ் தர நிலையில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி, தற்போது மாநில மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநரின் ஒப்புதலுடன் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இவர் மாநிலத்தில் உள்ள அனைத்து தாலுகா மற்றும் மாவட்ட மருத்துவமனைகளையும் கட்டுப்படுத்தி பொறுப்பு வகிப்பார். இதுவரை டி.எம்.எஸ் ஆக இருந்து வந்த டாக்டர் ஆர்.இளங்கோ மகேஸ்வரன், இவர் வகித்து வந்த டி.எம்.எஸ் இ.எஸ்.ஐ., மருத்துவமனைகள் பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...