கோவை வஉசி மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி – முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், காப்பகங்களில் வாழும் குழந்தைகள் கண்டுகளிப்பு

பொருட்காட்சிக்கு வந்த முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், காப்பகங்களில் வாழும் குழந்தைகள், 27 அரசு துறைகள், 7 அரசு சார்பு நிறுவனங்கள் என 34 அரங்குகளை பார்வையிட்டனர். பின்னர், ராட்டினம், ஜெயின்ட் வீல் ஆகியவற்றை விளையாடி மகிழ்ந்தனர்.


கோவை: கோவை வஉசி மைதானத்தில் அரசுத் துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரசுப் பொருட்காட்சியினை முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் காப்பகங்களில் வாழும் குழந்தைகள் என 200-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.



இவர்களுக்கு எந்த விதமான கட்டணம் இல்லாமல் இலவசமாக உள்ளே அனுமதிக்கப்பட்டு பொருட்காட்சியில் இருக்கும் 27 அரசு துறைகள், 7 அரசு சார்பு நிறுவனங்கள் என 34 அரங்குகளை பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து அங்கு இருக்கக்கூடிய பொழுதுபோக்கான ராட்டினம், ஜெயின்ட் வீல் ஆஇயவற்றை இலவசமாக விளையாடி மகிழ்ந்தனர். பின்னர் அங்கிருந்த Snow World-யில் பனிப்பொழிவில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மகிழ்ச்சியாக நடனமாடி அசத்தினர்.



4-வது ஆண்டாக கோவை பொருட்காட்சி வியாபாரிகள், அரங்க உரிமையாளர்கள், கேளிக்கை பகுதி உரிமையாளர்கள், ஃபுட் கோர்ட் உரிமையாளர்கள் ஆகியோர் இவர்களுக்கு ஸ்னாக்ஸ் மற்றும் இரவு உணவுகள் இலவசமாக வழங்கினர்.



மேலும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஆதரவற்ற காப்பகத்தில் இருப்பதால் எந்த விதமான மகிழ்ச்சி அடையாமல் இருக்கின்றனர். அதனால் இதுபோல பொருட்காட்சிக்கு அழைத்து வந்து இவர்களை மகிழ்விக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர் ரபீக் தெரிவித்தார்.



காப்பகத்தில் உள்ளே நான்கு சுவர்களில் சுற்றி வந்தவர்களுக்கு, இது ஒரு நல்வாய்ப்பாக அமையும் என்று அவர் கூறினார்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...