கோவையில் மிதமான பூகம்பத்தினால் எளிதில் பாதிக்கக்கூடிய பகுதிகள் அதிகம் - அண்ணா பல்கலை ஆய்வில் தகவல்

கோவை தெற்கு பகுதியில் உள்ள நொய்யல் நதி, உக்கடம் குளம் மற்றும் சங்கனூர் ஓடை ஆகிய பகுதிகள் பூகம்ப பாதிப்பு உள்ள பகுதிகள் என்று அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.



கோவை: கோவை மற்றும் சேலம் மாநகரங்களில் உள்ள சுமார் 80% பகுதிகள் மிதமான பூகம்பத்தினால் எளிதில் பாதிப்பு அடையக்கூடியவை என்பது அண்ணா பல்கலைகழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையம் அண்மையில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தமிழக அரசின் நில அதிர்வு அபாய மதிப்பீடு பணிகளில் ஒன்றாக, 'Seismic Hazard Assessment and Microzonation of Salem and Coimbatore Cities' என்ற பெயரில் இந்த ஆய்வு நடைபெற்றுள்ளது. அதில் மிதமான பூகம்ப பாதிப்பு உள்ள பகுதிகள் கோவை தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் உள்ளது. கோவை தெற்கு பகுதியை பொறுத்தவரை பூகம்ப பாதிப்பு உள்ள பகுதிகள் நொய்யல் நதி, உக்கடம் குளம் மற்றும் சங்கனூர் ஓடை ஆகிய பகுதிகளை சுற்றிஅமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே கட்டப்பட்ட கட்டிடங்களில் எவையெல்லாம் பாதிக்கப்படக்கூடியவையாக இருக்கின்றதோஅந்தகட்டிடங்களை மறுசீரமைப்பது அவசியம் எனவும், அதை செய்தால் தான் பூகம்பம் ஏற்பட்டால் அப்போது பாதிப்பு குறைவானதாக இருக்கும் என்றும், இனி கட்டப்படும் கட்டிடங்கள் பூகம்பங்களை எதிர்கொள்ளும் தன்மை கொண்டவையாக வடிவமைக்கப்படுவதை உறுதி செய்தல் வேண்டும் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...