அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் பல்கலையில் "நன்றி நவிலும் நாள் விழா"

அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் பல்கலையில் உள்ள திருச்சிற்றம்பலக் கலையரங்கில் "நன்றி நவிலும் நாள் விழா" நடைபெற்றது. இதில், போசிரியல் பார்வதி வரவேற்புரையாற்றினார்.

இதனைத்தொடர்ந்து, அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் பல்கலை உயர்கல்வி நிறுவனத்தின் துணை வேந்தர் பிரேமாவதி விஜயன் 2016-17 ஆம் ஆண்டில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்தும், சாதனைகள் குறித்தும் ஆய்வறிக்கையினை வாசித்தார். 

தொடர்ந்து, வேந்தர் ப.ரா.கிருஷ்ணகுமார் தலைமையுரை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், பெண்கள் கல்வி முன்னேற்றத்திற்காக அவினாசிலிங்கம் பல்கலைக் கழகம் செயல்பட்டு வருகிறது. மாணவியர்கள் தங்களது படிப்பு மற்றும் திறமைகளை வெளிக்கொணர காரணமாக இருக்கிற ஆசிரியர்களின் சேவையை உணர்ந்து செயலாற்ற வேண்டும்' என கூறினார்.

இதையடுத்து, இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி தலைவர் மருத்துவர் எஸ்.ராமலிங்கம் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், இப்பல்கலைக் கழகத்திற்கு சிறப்பு விருந்தினராக வருகைபுரிந்ததற்கு தான் பெருமை அடைகிறேன். அன்பும் மரியாதையுடன் கலந்த ஒரு கல்வியை கற்பித்து கொண்டிருக்கிற ஒரு கல்வி நிறுவனமாக அவினாசிலிங்கம் பல்கலைக் கழகம் திகழ்கிறது. மாணவர்கள் தங்களுக்குள் இருக்கும் திறமையை அறிந்து கொண்டு கல்விகற்க வேண்டும். தன்னம்பிக்கையுடன் மனம் தளராமல் செயல்பட வேண்டும். தங்களுக்கு கிடைக்கும் நல்ல வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்திக் கொண்டால் அதன் பயன் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து வரும். 

பல்வேறு அறிஞர்கள் எழுதிய புத்தகங்களை படிக்கும் பழக்கம் வளர வேண்டும். தங்களால் முடிந்த  வரை மக்களுக்கு உதவும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்" என்றார்.

இதனைத்தொடர்ந்து, இளங்களை மற்றும் முதுகலை பயிலும் மாணவியர்கள், தொழில்நுட்பக் கல்வி, ஆசிரியர் பயிற்சிக் கல்வி, உடற்பயிற்சிக் கல்வித் துறையிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற 250 மாணவியர்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் நிறைவாக விலங்கியல் துறை பேராசிரியர் கே.எஸ்.சாந்தி நன்றியுரை வழங்கினார்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...