தாராபுரம் அருகே செம்மண் கடத்திய இரண்டு லாரிகள், ஜேசிபி இயந்திரம் பறிமுதல்..!

தாராபுரம் பகுதியில் அனுமதி இன்றி எந்த வகையிலும் மண் கடத்தலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தாசில்தார் எச்சரித்துள்ளார்.


Coimbatore: தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கிராவல் மண் கடத்தப்பட்டு வருவதாக தாராபுரம் வட்டாட்சியருக்கு தொடர்ந்து தகவல்கள் வந்த வண்ணம் இருந்து வருகிறது.

இந்நிலையில் அலங்கியம் அருகில் வட்டமலை புதூர் செல்லும் சாலையில் உள்ள 3 ஏக்கர் விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக செம்மண் கடத்தப்பட்டு வந்தது தெரிய வந்தது. இதை எடுத்து தாராபுரம் வட்டாட்சியர் கோவிந்தசாமி சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு டிப்பர் லாரிகள் மற்றும் ஜேசிபி இயந்திரம் மண் அள்ளிக் கொண்டு இருப்பதை பார்த்தார். இதைப் பார்த்த டிப்பர் லாரி ஓட்டுநர்கள் சாவியை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினர்.

தாராபுரம் வட்டாட்சியர் கோவிந்தசாமி மற்றும் வருவாய் ஆய்வாளர் பாரதி, கிராம நிர்வாக அலுவலர்கள் மாரியப்பன்,சக்திவேல், நந்தகோபல், சுரேஸ் அவர்களை வைத்து இரண்டு லாரிகளையும் ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்து அலங்கியம் காவல் நிலையத்தில் ஒடைத்தனர். தாராபுரம் பகுதியில் அனுமதி இன்றி எந்த வகையிலும் மண் கடத்தலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தாசில்தார் எச்சரித்துள்ளார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...