கோவையில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: கடத்தல்காரர்கள் தப்பியோட்டம்

கோவையில் இருந்து கேரளாவிற்கு இரு சக்கரவானங்கள் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வழங்கல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் உணவுப்பாதுகாப்பு மற்றும் வழங்கல் பிரிவு பறக்கும் படை அதிகாரிகள் வேளந்தாவளம் சோதனைச்சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். 

அப்போது இரண்டுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் ரேஷன் அரிசி கடத்தி வந்த மர்ம நபர்கள் அதிகாரிகள் தனிக்கை செய்வதை அறிந்ததும் பயந்து, அரிசி மூட்டைககை கீழே வீசிவிட்டு வாகனங்கள் மூலம் தப்பியோடினர். 

தொடர்ந்து,அவர்கள் வீசிச்சென்ற 400 கிலோ ரேசன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வழங்கல் துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக கே.ஜி.சாவடி போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...