கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து உடுமலையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசைக் கண்டித்து உடுமலை-பொள்ளாச்சி சாலையில் மறியலில் ஈடுபட முயன்ற பாஜகவினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மது விற்பனையை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக வெங்கட கிருஷ்ணா சாலையில் இருந்து வித்யாசாகர் சாலை வழியாக திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி தலைமையில் ஊர்வலமாக சென்ற பாஜகவினர் உடுமலை- பொள்ளாச்சி சாலையில் மறியலில் ஈடுபட முயற்சித்தனர்.

அப்போது காவல்துறையினருக்கும் பாஜகவினர்க்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் வலுகட்டாயமாக காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.



இந்த நிகழ்வில் மாநிலச் செயலாளர் மலர்க்கொடி, மாநில ஓபிசி அணி பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.குட்டியப்பன், மாநில வழக்கறிஞர் பிரிவு பழனிச்சாமி, மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன், நகர தலைவர் கண்ணாயிரம் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தையொட்டி உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெ.சுகுமாறன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...