கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து உடுமலையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசைக் கண்டித்து உடுமலை-பொள்ளாச்சி சாலையில் மறியலில் ஈடுபட முயன்ற பாஜகவினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மது விற்பனையை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக வெங்கட கிருஷ்ணா சாலையில் இருந்து வித்யாசாகர் சாலை வழியாக திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி தலைமையில் ஊர்வலமாக சென்ற பாஜகவினர் உடுமலை- பொள்ளாச்சி சாலையில் மறியலில் ஈடுபட முயற்சித்தனர்.

அப்போது காவல்துறையினருக்கும் பாஜகவினர்க்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் வலுகட்டாயமாக காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.



இந்த நிகழ்வில் மாநிலச் செயலாளர் மலர்க்கொடி, மாநில ஓபிசி அணி பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.குட்டியப்பன், மாநில வழக்கறிஞர் பிரிவு பழனிச்சாமி, மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன், நகர தலைவர் கண்ணாயிரம் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தையொட்டி உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெ.சுகுமாறன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...