கோவையில் 20 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் பணி துவக்கம்

கோவை வ.உ.சி. பூங்கா பகுதியில் முதல் சார்ஜிங் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இந்த சார்ஜிங் நிலையங்களில் டாடா நிறுவனத்தின் EZ சார்ஜ் எனும் சார்ஜிங் கட்டமைப்பு அமைக்கப்படும். இதனால் 1 மணி நேரத்தில் ஒரு மின்சார காருக்கு தேவைப்படும் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.


கோவை: கடந்த நிதியாண்டு வரை இந்தியாவில் 38.50 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன. இதில் 95% வாகனங்கள் 2 சக்கர மின்சார வாகனங்கள், 1.67 லட்சம் வாகனங்கள் 4 சக்கர மின்சார வாகனங்கள் மற்றும் 7,700 வாகனங்கள் மின்சார பேருந்துகள், இந்தியாவில் விற்கப்படும் சுமார் 40% நான்கு சக்கர மின்சார வாகனங்களும், சுமார் 70% 2 சக்கர மின்சார வாகனங்களும் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டவை.

நாடு முழுவதும் மின்சார வாகனங்களின் விற்பனை மற்றும் பயன்பாடு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது என்பதில் மாற்று கருத்து இல்லை. கோவை மாநகரில் 20 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைத்திட கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் டாடா பவர் கம்பெனி லிட், மும்பை (TATA POWER FAST CHARGING STATION) புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டன.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் தற்போது கோவை வ.உ.சி. பூங்கா பகுதியில் முதல் சார்ஜிங் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இந்த சார்ஜிங் நிலையங்களில் டாடா நிறுவனத்தின் EZ சார்ஜ் எனும் சார்ஜிங் கட்டமைப்பு அமைக்கப்படும். இதனால் 1 மணி நேரத்தில் ஒரு மின்சார காருக்கு தேவைப்படும் 80% சார்ஜ் வரை செய்ய முடியும்.

இதையும் சேர்த்து மொத்தம் அமையவுள்ள 20 சார்ஜிங் நிலையங்களில் 3 ஆர்.எஸ்.புரம் பகுதியில் அமைகிறது. அவிநாசி சாலை, வ.உ.சி. பூங்கா பகுதி, வாலாங்குளம் மற்றும் காளப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 2 சார்ஜிங் நிலையங்களும், சரவணம்பட்டி, புரூக்பீல்டு அருகே அமைந்துள்ள மாநகராட்சி பார்க்கிங் பகுதி, சிங்காநல்லூர், டைட்டில் பார்க், காந்திபுரம் கிராஸ்கட் சாலை, பெரியகுளம், துடியலூர் ஆகிய பகுதிகளில் தலா 1 சார்ஜிங் நிலையமும் அமைகிறது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...