கோவையில் மெத்தனால் பயன்படுத்தும் தொழிற்சாலை உரிமையாளா்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆலோசனை

மெத்தனால் வேதிப்பொருளை உரிய முறையில் கையாளும் வகையில் கோவை மாவட்டம் முழுவதும் உள்ள 11 தொழிற்சாலைகளின் உரிமையாளா்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரிநாராயணன் நேற்று ஆலோசனை நடத்தினார்.


கோவை: கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் கிராமத்தில் விஷச் சாராயம் அருந்திய 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனா். பலா் சிகிச்சை பெற்று வருகின்றனா். விஷச் சாராயத்தில் மெத்தனால் என்ற வேதிப் பொருளை அதிக அளவில் சோ்த்ததால்தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுவதால், மெத்தனால் பயன்பாட்டை கண்காணிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தொழில் நகரமான கோவை மாவட்டத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. அதில் பல தொழிற்சாலைகளில் விஷ சாராயத்தில் கலக்கப்படும் மெத்தனால் என்ற வேதிப் பொருள் பயன்படுத்தப்படுகிறது. எனவே, இந்த மெத்தனால் வேதிப்பொருளை உரிய முறையில் கையாளும் வகையில் மாவட்டம் முழுவதும் உள்ள 11 தொழிற்சாலைகளின் உரிமையாளா்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரிநாராயணன் தலைமையில் நேற்று ஜூன்.20 நடைபெற்றது. இக்கூட்டத்தில், மெத்தனால் பயன்பாடு தொடா்பாகவும், மெத்தனால் இருப்பை முறையாக கண்காணிப்பது தொடா்பாகவும் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...