கோவை மாநகராட்சி, சன்லேக் அக்ரோ இன்டஸ்ட்ரீஸ் இணைந்து கர்பிணி பெண்களுக்கு "அமிர்தானியம்" திட்டம் துவக்கம்

கோவை மாநகராட்சியும், சன்லேக் அக்ரோ இன்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் இணைந்து மாநகராட்சி நகர் நல மையங்களுக்கு சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் நோயாளிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொருட்டு சிறுதானியங்களான பொருட்களை வாரம் தோறும் ஒவ்வொரு வியாழக்கிழமைகளில் தொடர்ச்சியாக 6 மாதகாலத்திற்கு இலவசமாக வழங்க திட்டமிட்டு அதற்கு "அமிர்தானியம்" என பெயரிடப்பட்டுள்ளது.

இதன் தொடக்கமாக இன்று (ஏப்ரல் 13) காலை 9.30 மணி அளவில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் மற்றும் துணை ஆணையர் ப.காந்திமதி ஆகியோர் தலைமையில் எஸ்.எம்.எம்.ஹோம் நகர் நல மையத்திற்கு வரும் நோயாளிகள் மற்றும் உடன் வருபவர்களுக்கும் 250 கிராம் திணை சிறுதானியம் பாக்கெட் சுமார் 100 நபர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

மேலும், மாநகராட்சி ஆணையர் சிறுதானியங்களின் நன்மைகள், அதனால் உடலில் சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் குறித்து அங்குள்ள அனைவருக்கும் விளக்கி கூறினார்.

இவ்விழாவில் மாநகர நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், எஸ்.எல்.எம்.ஹோம் மருத்துவ அலுவலர்கள் மருத்துவர் இளமதி மற்றும் மருத்துவர் ஹேமலதா, உதவி பொறியாளர் மகேஷ், உதவி செயற்பொறியாளர் கலாவதி, மத்திய மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...