கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்தை தாராபுரம் நகராட்சியில் இணைக்க கூடாது என பொதுமக்கள் மனு

தாராபுரம் தாலுகாவில் ஜமாபந்தியில், கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்தை தாராபுரம் நகராட்சியில் இணைக்க வேண்டும் என்ற முடிவுக்கு எதிராக பொதுமக்கள் மனு அளித்தனர். ஆர்.டி.ஒ செந்தில் அரசன் பார்வைக்கு அனுப்பினார்.



திருப்பூர்: தாராபுரம் தாலுகாவில் ஜமாபந்தி ஆர்டிஓ செந்தில் அரசன் தலைமையில் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. தாசில்தார் கோவிந்தசாமி முன்னிலை வகித்தார். தாராபுரம் உள் வட்டத்தை சேர்ந்த 9 வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பட்டாமாறுதல், ஓஏபி உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 220 மனுக்கள் அளிக்கப்பட்டது. மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்.டி.ஒ கூறினார்.



தாராபுரம் கவுண்டச்சி புதூர் பஞ்சாயத்தைசேர்ந்த 9 வார்டுகளிலிருந்து பெண்கள் உள்பட சுமார் 200 பேர் தாராபுரம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.



பின்னர் ஆர்டிஓவிடம் பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டதாவது, கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்தை தாராபுரம் நகராட்சியுடன் இணைப்பத என்ற முடிவு எடுக்க உள்ளதாக அறிந்தோம்.

100 நாள் வேலை திட்டத்தில் தற்போது 2 ஆயிரம் பேர் வேலை செய்து வருகிறோம். நகராட்சியுடன் இணைத்தால் வேலை வாய்ப்பை இழப்பதுடன் வாழ்வாதாரம் பாதிக்கும்.

மேலும வறுமை கோட்டிற்கு கீழ்வாழும் எங்களுக்கு நகராட்சியில் வசூலிக்கப்படும் சொத்துவரி, குடிநீர் கட்டணத்தை செலுத்த இயலாது. எனவே இவ்முடிவை கைவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது மனுவை பெற்றுக்கொண்டார். ஆர்.டி.ஓ செந்தில் அரசன் தமிழக அரசின் பார்வைக்கு அனுப்பி வைப்பதாக கூறினார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...