கோவை கோட்டைமேடு மன்பஉல் உலூம் மெட்ரிக் பள்ளியில் எல்கேஜி மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

முதல் நாள் வகுப்புகளுக்கு வருகை புரிந்த எல்கேஜி குழந்தைகளுக்கு டிரம்ஸ் வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பள்ளி வளாகத்தில் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.


கோவை: கோவை கோட்டைமேடு பகுதியில் மன்பஉல் உலூம் மெட்ரிக்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் இன்று ஜூன்.20 முதல் எல்கேஜி வகுப்புகள் துவங்குகின்றன. அதன்படி முதல் நாள் வகுப்புகளுக்கு வருகை புரிந்த குழந்தைகளுக்கு டிரம்ஸ் வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடந்து பள்ளி வளாகத்தில் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் பள்ளியில் பயிலும் மாணவியர்கள் மரங்கள் வளர்ப்பதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கும் வண்ணம் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு பள்ளி குழந்தைகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினர்.

மேலும் மிக்கி மவுஸ் உடைகள் அணிந்தும் குழந்தைகளுக்கு விளையாட்டு காண்பிக்கப்பட்டு முகமூடிகள் அணிவிக்கப்பட்டன. மேலும் பள்ளி வகுப்புகள் துவங்கியதும் பெற்றோர்கள் புறப்பட்டு சென்றதை தொடர்ந்து குழந்தைகள் பலரும் அழுவதற்கு ஆரம்பித்து பெற்றோருடன் செல்வதற்கு அடம் பிடித்தனர். அவர்களை பள்ளி ஆசிரியர்கள், உதவியாளர்கள் சமாதானப்படுத்தி அமர செய்தனர். சில குழந்தைகள் உற்சாகமாய் சக குழந்தைகளுடன் பேசி மகிழ்ந்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...