கோவையில் ரூ.42 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட நகைப்பட்டறை உரிமையாளரும், உறவினரும் பத்திரமாக மீட்பு

கோவை ஆர்.எஸ்.புரத்தில் குறைப்பாட்டுடன் தங்க வளையல் தயாரித்து கொடுத்ததால் ஆத்திரமடைந்த நபர்கள் நகைப்பட்டறை உரிமையாளா் மற்றும் அவரது உறவினரை காரில் கடத்திச்சென்று 45 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர். இரண்டு பேரையும் மீட்ட போலீசார், கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர்.


கோவை: கோவை, ஆா்.எஸ்.புரம் பொன்னையராஜபுரம் முதல் தெருவைச் சோ்ந்தவா் செந்தில்குமார் (40). இவர் தங்க நகைப் பட்டறை நடத்தி வருகிறார். இவரது சகோதரி சுதாவின் மகன் விஷ்ணுவாசன் (22). இவரும் செந்தில்குமாரின் நகைப்பட்டறையில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், செந்தில்குமார் மற்றும் விஷ்ணுவாசன் ஆகியோர் தங்களது வளா்ப்பு நாயுடன் காரில் திங்கள்கிழமை ஜூன்.17 இரவு சென்றனா். ஏ.கே.எஸ். நகா் வரை சென்று வருவதாக கூறிச் சென்ற இவா்கள் திடீரென மாயமாகினா். இதனால், அதிர்ச்சியடைந்த உறவினா்கள், பல்வேறு இடங்களில் தேடியும் அவா்கள் கிடைக்கவில்லை.

இந்நிலையில், சுதாவுக்கு வாட்ஸ்ஆப் செயலி மூலம் செவ்வாய்க்கிழமை அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபா் ஒருவர், உங்களது மகனையும், சகோதரரையும் கடத்திச் சென்றுள்ளதாகவும், நாங்கள் தங்க நகை தயாரித்து கொடுக்கும்படி கேட்டோம், ஆனால் குறைபாடுள்ள நகைகளை தயாரித்து கொடுத்துள்ளதால் இருவரையும் கடத்தியுள்ளோம். எனவே, இருவரையும் உயிருடன் விடுவிக்க ரூ.42 லட்சம் தர வேண்டும் என அந்த நபா் கூறியுள்ளார்.

இதற்கு சுதா தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனக் கூறியுள்ளார். பணம் கொடுத்தால் மட்டுமே இருவரையும் விடுவிப்போம் என மிரட்டியுள்ளார். பின் இது குறித்து ஆா்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் சுதா புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், செந்தில்குமார் மற்றும் விஷ்ணுவாசனை கடத்திச் சென்றது சிவகங்கையைச் சோ்ந்த தனபால், தனசேகா் என்பதும், கடத்தலுக்கு உதவியாக சதீஷ் என்பவா் இருந்ததும் தெரியவந்தது.

மேலும், பெண் ஒருவருக்கு தங்க வளையல்களை தயாரித்துக் கொடுக்குமாறு செந்தில்குமாரை சதீஷ் அணுகியுள்ளார். ஆனால், குறைபாட்டுடன் தயாரிக்கப்பட்ட நகைகளை அப் பெண்ணிடம் சதீஷ் கொடுத்ததாகவும், அந்தப் பெண்ணின் தூண்டுதலின் பேரிலேயே இந்த கடத்தல் நடந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கடத்தப்பட்ட இருவருடன் தனபால், தனசேகா் மற்றும் சதீஷ் ஆகியோர் சிவகங்கையில் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து கோவை மாநகர துணை ஆணையா் சரவணக்குமார் மேற்பார்வையில் தனிப் படை போலீஸார் ஜூன்.19 சிவகங்கை சென்றனா்.

இதையறிந்த அந்த கடத்தல் கும்பல் செந்தில்குமார், விஷ்ணுவாசன் ஆகியோரை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. இருவரையும் மீட்ட போலீஸார் தப்பியோடிய மூவரையும் தேடி வருகின்றனா்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...