கோவை கோவில்பாளையத்தில் கடன் தருவதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்த இரண்டு பேர் கைது

கோவில்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலைப்பார்க்கும் ரவிக்குமார் என்பவரிடம் குறைந்த வட்டியில் கடன் தருவதாக கூறி இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை, கோவில்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக ரவிக்குமார் என்பவா் பணியாற்றி வருகிறார். இவரது கைப்பேசி எண்ணுக்கு அண்மையில் வந்த அழைப்பில் பேசிய நரேஷ் மற்றும் யுவராஜ் ஆகியோர் தாங்கள் கணபதியில் உள்ள ஒரு நிதி நிறுவன அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி அறிமுகம் ஆகியுள்ளனா்.

அப்போது, அவா்கள் குறைந்த வட்டியில் கடன் தருவதாக கூறியுள்ளனா். இதனை நம்பிய ரவிக்குமார் தனக்கு ரூ.20 லட்சம் கடன் தேவைப்படுவதாக கூறியுள்ளார். அதற்கு அவா்கள் கடன் தொகை பெற வேண்டுமெனில், ஆவணங்கள் தயார் செய்வதற்காக ரூ.1 லட்சத்து ரூ.20 ஆயிரம் கட்டணமாக கொடுக்க வேண்டும் எனவும், மொத்தம் ரூ.2 லட்சம் ஆகும் எனவும் கூறி உள்ளனா்.

இதையடுத்து, அவா்கள் கேட்ட தொகையை ரவிக்குமார் வழங்கினார். பணத்தை பெற்றுக் கொண்ட அவா்கள், கடன் தொகையை விரைவில் வழங்குவதாக கூறி சென்றனா். ஆனால், அதன் பிறகு அவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை. மேலும், ரூ.20 லட்சம் கடனும் கொடுக்கவில்லை.

இதையடுத்து, மோசடி செய்யப்பட்டதை அறிந்த ரவிக்குமார் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மோசடியில் ஈடுபட்டவா்கள் வேலூா் மாவட்டம், ஆா்காடு வாத்தியார் கோவிந்தராஜ் வீதியைச் சோ்ந்த நரேஷ் (31), திருப்பூா் மாவட்டம் காங்கயம் தேவாங்காபுரத்தைச் சோ்ந்த யுவராஜ் (36) என்பது தெரியவந்தது.

இதையடுத்து காந்திபுரத்தில் பதுங்கி இருந்த அவா்களை ரேஸ்கோர்ஸ் போலீஸார் நேற்றுஜூன்.19 கைது செய்தனா்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...