பல்லடம் அருகே இடுவாய் பகுதியில் மளிகை கடையில் திருட்டு – காவல்துறை விசாரணை

இடுவாய் பகுதியில் உள்ள வஞ்சிபாளையம் பிரிவில் ராஜா என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் சுமார் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர் யார் என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இடுவாய் பகுதியில் உள்ள வஞ்சிபாளையம் பிரிவில் தனியார் மளிகை கடை ஒன்றில் திருட்டு சம்பவம் நடைபெற்றது. அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவருக்கு சொந்தமான மளிகைக் கடையில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

வழக்கம் போல 17ஆம் தேதி இரவு 10 மணியளவில் கடையை பூட்டிக்கொண்டு வீட்டிற்கு ராஜா சென்ற நிலையில், நேற்று காலையில் கடையை திறக்க வந்தபோது ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.



உள்ளே சென்று பார்த்தப்போது, கல்லாப்பெட்டியில் இருந்த பணம் மாயமானது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக காவல்துறை யினருக்கு அவர் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடையில் சுமார் ரூ.30,000பணம் திருடு போனது விசாரணையில் தெரியவந்தது.

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...