மாநகராட்சி பணிகள் குறித்து கோவை மேற்கு மண்டலத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம் 17-வது வார்டுக்குட்பட்ட ஓணாப்பாளையம், வடவள்ளி பகுதியில் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து, வடவள்ளி பகுதியில் பயன்பாட்டில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டி, பொன் நகர் பகுதியில் உள்ள ரூ.33.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாநகராட்சி பூங்கா, வடவள்ளி பகுதியில் உள்ள மாநகராட்சி மயாண இடம் ஆகியவற்றை மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்.



தொடர்ந்து, 18-வது வார்டுக்குட்பட்ட வீரகேரளம், ரவீஸ் அவென்யூ பகுதியில் மீட்கப்பட்ட மாநகராட்சிப் பொது ஒதுக்கீட்டு இடத்தில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டதையும், ஐஓபி காலனியிலிருந்து மருதமலை பிரதான சாலையை இணைக்கும் வகையில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் இணைப்புப் பாலத்தை மாநகராட்சி ஆணையர் மற்றும தனி அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.



இதைத்தொடர்ந்து, வடவள்ளியில் ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் பார்வையிட்டார்.



இந்நிகழ்வுகளின் போது, துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், மேற்கு மண்டல உதவி ஆணையர் ராமைய்யா, மாநகராட்சிப் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...