கோவையில் இருந்து விமானம் மூலம் காசி, அயோத்தி, கயா செல்ல ஆன்மிக சுற்றுலா - இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் அறிவிப்பு

ஜூலை 18ம் தேதி கோவையில் இருந்து காசி விஸ்வநாதர் விமான சுற்றுலா துவங்குகிறது. கோவையில் இருந்து அன்னபூரணி ஆலயம், காசி விசாலாட்சி ஆலயம், காலபைரவர் கோவில், சாரநாத் போன்ற இடங்களை காண ஆன்மிக சுற்றுலா இயக்கப்படுகிறது என்று இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் தெரிவித்துள்ளது.


கோவை: இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் இன்று ஜூன்.13 வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் பல்வேறு சுற்றுலாக்களை ஏற்பாடு செய்து வருகிறது. மேலும் பாரத் கவுரவ் சுற்றுலா, ரயில் சுற்றுலா, பள்ளி, கல்லுாரிகளுக்கான கல்வி சுற்றுலா போன்றவற்றை இயக்கி வருகிறது.

இந்த ரயில் மூலமாகவும் மற்றும் விமானம் மூலமாகவும் பல்வேறு சுற்றுலா திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில், காசி, அயோத்தி, அலகாபாத், கயா, புத்தகயா விமான சுற்றுலா, பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் வரும் ஜூலை 18ல் கோவையில் இருந்து காசி விஸ்வநாதர் விமான சுற்றுலா துவங்குகிறது.

கோவையில் இருந்து அன்னபூரணி ஆலயம், காசி விசாலாட்சி ஆலயம், காலபைரவர் கோவில், சாரநாத், கங்கா ஆரத்தி, அலகாபாத் திரி வேணி சங்கமம், பாதாள அனுமன் ஆலயம், அலகாபாத் கோட்டை, அயோத்தி ராமர் கோவில், புத்தகயாவில் உள்ள புத்தர் சிலை மற்றும் மகோபோதி ஆலயம், கயாவில் உள்ள விஷ்ணு பாத ஆலயம் போன்ற இடங்களை காண ஆன்மிக சுற்றுலா இயக்கப்படுகிறது.

மேலும் விமான கட்டணம், நட்சத்திர ஓட்டலில் தங்குமிடம், போக்குவரத்து, காலை மற்றும் இரவு உணவு, ஜி.எஸ்.டி.யுடன் சேர்த்து கட்டணம், 41 ஆயிரத்து 150 ரூபாய். கூடுதல் விபரங்களுக்கு, 90031-40655 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...