கோவையில் இருந்து விமானம் மூலம் காசி, அயோத்தி, கயா செல்ல ஆன்மிக சுற்றுலா - இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் அறிவிப்பு

ஜூலை 18ம் தேதி கோவையில் இருந்து காசி விஸ்வநாதர் விமான சுற்றுலா துவங்குகிறது. கோவையில் இருந்து அன்னபூரணி ஆலயம், காசி விசாலாட்சி ஆலயம், காலபைரவர் கோவில், சாரநாத் போன்ற இடங்களை காண ஆன்மிக சுற்றுலா இயக்கப்படுகிறது என்று இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் தெரிவித்துள்ளது.


கோவை: இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் இன்று ஜூன்.13 வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் பல்வேறு சுற்றுலாக்களை ஏற்பாடு செய்து வருகிறது. மேலும் பாரத் கவுரவ் சுற்றுலா, ரயில் சுற்றுலா, பள்ளி, கல்லுாரிகளுக்கான கல்வி சுற்றுலா போன்றவற்றை இயக்கி வருகிறது.

இந்த ரயில் மூலமாகவும் மற்றும் விமானம் மூலமாகவும் பல்வேறு சுற்றுலா திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில், காசி, அயோத்தி, அலகாபாத், கயா, புத்தகயா விமான சுற்றுலா, பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் வரும் ஜூலை 18ல் கோவையில் இருந்து காசி விஸ்வநாதர் விமான சுற்றுலா துவங்குகிறது.

கோவையில் இருந்து அன்னபூரணி ஆலயம், காசி விசாலாட்சி ஆலயம், காலபைரவர் கோவில், சாரநாத், கங்கா ஆரத்தி, அலகாபாத் திரி வேணி சங்கமம், பாதாள அனுமன் ஆலயம், அலகாபாத் கோட்டை, அயோத்தி ராமர் கோவில், புத்தகயாவில் உள்ள புத்தர் சிலை மற்றும் மகோபோதி ஆலயம், கயாவில் உள்ள விஷ்ணு பாத ஆலயம் போன்ற இடங்களை காண ஆன்மிக சுற்றுலா இயக்கப்படுகிறது.

மேலும் விமான கட்டணம், நட்சத்திர ஓட்டலில் தங்குமிடம், போக்குவரத்து, காலை மற்றும் இரவு உணவு, ஜி.எஸ்.டி.யுடன் சேர்த்து கட்டணம், 41 ஆயிரத்து 150 ரூபாய். கூடுதல் விபரங்களுக்கு, 90031-40655 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...