தில்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக பொள்ளாச்சியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் தில்லியில் உள்ள ஜந்தர் மந்தர் என்னும் பகுதியில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த நான்கு வாரங்களாக நடைபெற்று வரும் இந்த போராட்டமானது இன்றுடன் 29-வது நாளை எட்டியுள்ளது.



இதனிடையே, நேற்று (ஏப்ரல் 10) திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளில் சிலர் நிர்வாணமாக சாலையில் புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டது தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் அதிர்ப்திக்குள்ளாகினர்.



இதனைத்தொடர்ந்து இன்று கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் மக்கள் ஒன்றிணைந்து தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இப்போராட்டத்தின் போது, அனைத்து விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணம் முழுமையாக கிடைக்க வேண்டும். திருமூர்த்திமலை அணை தூர்வாரி நீர்கொள்லளவை அதிகரிக்க வேண்டும். பிஏபி கால்வாயை செப்பனிட்டு தண்ணீர் விணாகாமல் கடைமடை வரை தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். ஆனைமலை நல்லாறு திட்டத்தினை நிறைவேற்ற வேண்டும். தில்லியில் போராடும் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும். வறட்சியினால் வங்கியில் வாங்கிய கடனை கட்டமுடியாமல் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை மற்றும் அதிர்ச்சி மரணம் அடைந்துள்ளனர். எனவே, அவர்களது குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Newsletter

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...