திருமண வீடியோவை வழங்காத ஸ்டுடியோ உரிமையாளர் இழப்பீடு வழங்க வேண்டும் - கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

திருமண வீடியோவை வழங்காமல் இழுத்தடித்த நாட் போட்டோகிராபி நிறுவனம் இந்துமதி, கே.மயில்சாமி ஆகியோருக்கு ஸ்டூடியோ உரிமையாளர் பெற்ற பணம் ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்துடன் சேர்ந்து, ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை மன உளைச்சலுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும், கோர்ட்டு செலவிற்காக ரூ.5,000 வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.


கோவை: கோவை, சரவணம்பட்டியை சேர்ந்த இந்துமதி, கே.மயில்சாமி ஆகியோர் கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில் எங்கள் குடும்ப திருமண நிகழ்வை வீடியோவில் பதிவு செய்யவும், போட்டோ எடுக்கவும் கோவை காந்திபுரத்தில் உள்ள நாட் போட்டோகிராபி நிறுவனத்திடம் ஒப்படைத்து இருந்தோம். இதற்காக முன் பணமாக ரூபாய் 1 லட்சத்து 35 ஆயிரம் பெற்றுக் கொண்டனர்.

திருமணத்தை பதிவு செய்த பின்னர் வீடியோ மற்றும் போட்டோவை கொடுக்கவில்லை. பின்னர் அந்த நிறுவனத்தை மூடிவிட்டு வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்து விட்டனர். அந்த முகவரியை அறிந்து அங்கு சென்று கேட்டோம். ஆனால் பணத்தை திரும்பி தரவில்லை. வீடியோ கிடைக்காததால் குடும்ப உறுப்பினர்களிடம் காண்பிக்க முடியவில்லை.

இதனால் மன உளைச்சல் ஏற்பட்டது. இதற்கு சம்பந்தப்பட்ட ஸ்டுடியோ உரிமையாளர் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி தங்கவேலு ஸ்டூடியோ உரிமையாளர் பெற்ற பணம் ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்தை வழங்குவதுடன் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை மன உளைச்சலுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும், கோர்ட்டு செலவிற்காக ரூ.5,000 வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Newsletter

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...