தாராபுரத்தில் இருசக்கர வாகனத்தை திருடிய கொள்ளையனை சிசிடிவி காட்சிகளை வைத்து கைது செய்த காவல்துறை

தாராபுரம் பகுதியிலுள்ள அண்ணா நகர் பகுதியில் கடந்த இரண்டாம் தேதி வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை திருடிச்சென்ற தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டிஸ்வரன் என்பவரை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியிலுள்ள அண்ணா நகர் பகுதியில் கடந்த இரண்டாம் தேதி வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹீரோ ஹோண்டா ஸ்ப்லெண்டர் வாகனம் திருடப்பட்டதாக வீட்டின் உரிமையாளர் தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.



இந்த புகாரின் பேரில் தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் கலையரசன் மேற்பார்வையில் தாராபுரம் காவல் ஆய்வாளர் ரவி தலைமையில், உதவி ஆய்வாளர்கள் முத்துக்குமார், சிவராஜ் மற்றும் தலைமை காவலர்கள் ராஜன், கலைச்செல்வன் மற்றும் பாலசுப்ரமணியம் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு காணாமல் போன இருசக்கர வாகனத்தை தேடி வந்தனர்.

இதேபோன்று உடுமலைப்பேட்டை காவல் நிலையத்திலும் இரு சக்கர வாகனம் காணாமல் போன வழக்கு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலைப்பேட்டைக்கு சென்ற தனிப்படை காவலர்கள் அங்கு உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளியை கண்டுபிடித்தனர்.

குற்றவாளி தேனி மாவட்டம் கடமலைக்குண்டுவைச் சேர்ந்த சின்னமுத்து என்பவரது மகன் பாண்டிஸ்வரன் வயது 22 என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து தாராபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இவர் தாராபுரத்தில் கடந்த இரண்டாம் தேதி இருசக்கர வாகனம் திருடியதை ஒப்புக்கொண்டார். அதைத் தொடர்ந்து அந்த இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளியை திருப்பூர் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...