தாராபுரத்தில் இருசக்கர வாகனத்தை திருடிய கொள்ளையனை சிசிடிவி காட்சிகளை வைத்து கைது செய்த காவல்துறை

தாராபுரம் பகுதியிலுள்ள அண்ணா நகர் பகுதியில் கடந்த இரண்டாம் தேதி வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை திருடிச்சென்ற தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டிஸ்வரன் என்பவரை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியிலுள்ள அண்ணா நகர் பகுதியில் கடந்த இரண்டாம் தேதி வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹீரோ ஹோண்டா ஸ்ப்லெண்டர் வாகனம் திருடப்பட்டதாக வீட்டின் உரிமையாளர் தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.



இந்த புகாரின் பேரில் தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் கலையரசன் மேற்பார்வையில் தாராபுரம் காவல் ஆய்வாளர் ரவி தலைமையில், உதவி ஆய்வாளர்கள் முத்துக்குமார், சிவராஜ் மற்றும் தலைமை காவலர்கள் ராஜன், கலைச்செல்வன் மற்றும் பாலசுப்ரமணியம் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு காணாமல் போன இருசக்கர வாகனத்தை தேடி வந்தனர்.

இதேபோன்று உடுமலைப்பேட்டை காவல் நிலையத்திலும் இரு சக்கர வாகனம் காணாமல் போன வழக்கு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலைப்பேட்டைக்கு சென்ற தனிப்படை காவலர்கள் அங்கு உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளியை கண்டுபிடித்தனர்.

குற்றவாளி தேனி மாவட்டம் கடமலைக்குண்டுவைச் சேர்ந்த சின்னமுத்து என்பவரது மகன் பாண்டிஸ்வரன் வயது 22 என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து தாராபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இவர் தாராபுரத்தில் கடந்த இரண்டாம் தேதி இருசக்கர வாகனம் திருடியதை ஒப்புக்கொண்டார். அதைத் தொடர்ந்து அந்த இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளியை திருப்பூர் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...